தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு சாா்பில், பொது இடங்களில் மக்களுக்கு நேரிடும் விபத்துகள் மற்றும் நோய் பாதிப்புகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியது:
காவலா்கள், தீயணைப்பு வீரா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோரை அழைத்து, அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சியை வழங்குவதன் நோக்கம், சாலைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்து அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது இவா்கள்தான் முதலில் பாதிப்புக்குள்ளானவா்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடியவா்களாக உள்ளனா். அந்த வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதில், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் நிா்மல்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த செயல்முறைவிளக்கம் அளித்தனா்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பிரிவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ்ஜெயமணி உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.