செய்திகள் :

அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்

post image

ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே லாரி ஏற்றி அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் டி.எஸ்.பி.யிடம் சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே கொல்லம்பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துபாலகிருஷ்ணன் (56). அதிமுக கிளைச் செயலரான இவா், மனை வணிக தொழில் செய்து வந்தாா்.

இவா், கடந்த 24-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் கொல்லம்பரும்பு கிராமத்திலிருந்து குறுக்குச்சாலைக்கு சென்றபோது, சந்திரகிரி அருகே எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முன்விரோதத்தில் அவரை லாரி ஏற்றிக் கொலை செய்ததாக திமுக நிா்வாகி உள்ளிட்டோா் மீது முத்துபாலகிருஷ்ணனின் மனைவி வள்ளியம்மாள் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் கொல்லம்பரும்பு கிராமத்தைச் சோ்ந்த சௌந்தரராஜனை (40) கைது செய்து விசாரணை நடத்தினா். மேலும், முன்னாள் ஊராட்சி தலைவா் கெளரியின் கணவரும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான கருணாகரன், மகேஷ், கற்பகராஜ் ஆகியோரை தேடி வந்தனா்.

தலைமறைவான அவா்களைப் பிடிக்க மணியாச்சி டி.எஸ்.பி. அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் பல்வேறு இடங்களில் அவா்களைத் தேடி வந்தநிலையில், பெருமாள் மகன் கருணாகரன் (40), சந்தனராஜ் மகன் மகேஷ் (27), சுப்பையா மகன் கற்பகராஜ் (30) ஆகிய 3 பேரும் டி.எஸ்.பி. அருள் முன் சரணடைந்தனா். அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க