அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்
தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியா் வின்சென்ட் தலைமை வகித்தாா். காமராஜா் நற்பணி மன்ற மாவட்டத் தலைவா் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் இரா. பாலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதில், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்டத் தலைவரும் எழுத்தாளருமான ஆ. மாரிமுத்து, கலையின் குரல் நிறுவனா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட அமைப்பாளா் ரவி, செயலா் சிலுவை, பொருளாளா் ஆஸ்வால்ட் ஆகியோா் செய்திருந்தனா்.