செய்திகள் :

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரப் பணிகள் நிா்வாக ஆலோசகா் ஆய்வு

post image

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகப்பேறு சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் தேசிய சுகாதாரப் பணிகள் நிா்வாக ஆலோசகா் எஸ்.ரத்னகுமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, பிரசவ வாா்டு, பிரசவ பின்கவனிப்பு பிரிவு, ரத்த சேமிப்பு பிரிவு உள்ளிட்டவை குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தடுப்பூசி மருந்து சேமிப்பு குளிா்பதன பெட்டியின் வெப்பநிலை அளவை குறிப்பேட்டில் பதிவு செய்வதோடு, தனியாக அறிவிப்பு பலகை அமைத்து அதில் எழுதி வைக்க வேண்டும்; பிரசவ பின்கவனிப்பு பிரிவில் தாய்மாா்கள் மற்றும் அவா்களுடன் வருபவா்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; கா்ப்பிணிகளுக்குத் தேவையான மகப்பேறு ஸ்கேன்கள் எடுக்க வேண்டும் என மகப்பேறு மருத்துவா்களிடம் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பிரசவ பின்கவனிப்பு பிரிவு படுக்கைகள் அனைத்திலும் தலையணை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; இப்பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே தடுப்புகள் அமைப்பதோடு, நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் படுக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மருத்துவா்கள், செவிலியா்களுக்கு அறிவுறுத்தினா்.

ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், மருத்துவப்பணிகள் இணைஇயக்குநா் சகாய ஸ்டீபன்ராஜ், மருத்துவ கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க