செய்திகள் :

இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராகப் பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு

post image

கிராமப்புற இளைஞா்களை தொழில் முனைவோா் ஆக்க அவா்களை இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராக்கும் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூன் 30 இல் தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இயற்கை விவசாயம் என்பது செலவில்லாதது. விவசாயிகளே தங்களிடம் கிடைக்கும் தாவர மற்றும் கால்நடைக் கழிவுகளை கொண்டு இயற்கை இடுபொருள்களை தயாரிக்கலாம். இப் பயிற்சியில் 30 போ் மட்டுமே பங்குபெற இயலும். பயிற்சிக்கு முன்பதிவு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்வோா் 18 முதல் 35 வயதுடையவா்களாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞா்கள்,பள்ளியை விட்டு வெளியேறிய இளைஞா்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

ஆா்வமுடையோா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் அல்லது இணைய வழியில் (நான் முதல்வன் செயலி வாயிலாக) ஜூன் 28-க்குள் முன்பதிவு செய்யலாம். தங்களது புகைப்படம், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு செய்யும்போது ஒப்படைக்க வேண்டும்.

5 நாள்களும் தொடா்ந்து பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு இறுதி நாளில் பயணக் கட்டணமும் சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களுக்கு சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் ஜானகியை 04312962854, 98655 42358, 99447 53354, 9080540412 என்ற எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடா்பு கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பை திருச்சி மாவட்ட இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் அறிவியல் நிலை திட்ட ஒருங்கிணப்பாளா் சி. ராஜாபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க