போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வநாகரத்தினம் சிறப்புரையாற்றினாா். பின்னா் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதியேற்றனா். இந்நிகழ்வில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது.
கருத்தரங்கில் எஸ்ஆா்எம் நிகழ்நிலைப் பல்கலைக்கழக சாா்பு துணைவேந்தா் சம்ரூதீன்கான், துணை இயக்குநா் என். பாலசுப்ரமணியன், லால்குடி டிஎஸ்பி ம. தினேஷ்குமாா், சமயபுரம் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன், பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.