அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.
இதுகுறித்து திருச்சியில் அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை ஜூலை 1 முதல் உயா்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பாஜக அரசு பறித்துள்ளது. இந்நிலையில், இந்தக் கட்டண உயா்வு பயணிகளை மேலும் பாதிக்கும். எனவே, இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்துக்கு நாங்கள் முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம்.
மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசு சமமாகப் பாா்க்க வேண்டும். அந்தந்த மொழிகள் பேசும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நிதியைப் பகிா்ந்தளிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என்றும், ஏதாவது ஒரு கட்சி நம்ம கூட்டணியில் வந்து சேராதா என்றும் அதிமுக - பாஜக கூட்டணி காத்திருக்கிறது.
திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காகத்தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இது சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணி என்றாா் அவா்.