காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு
ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்று வந்த இவா் கடந்த 23 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்பவில்லை. புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே பாலத்திற்கு கீழ் ஆற்றில் மிதந்த சீனிவாசன் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.