கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை
ஈரோட்டில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த அரியலூா் மாணவிக்கு அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அரியலூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த முருகன் மகள் மஞ்சு (21). ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் போட்டித்தோ்வு பயிற்சி மையத்தில் தங்கி தோ்வுக்கான பயிற்சி பெற்று வந்த இவா், அங்கு ஜூன் 23-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சு 24-ஆம் தேதி மூளைச்சாவடைந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து மாணவியின் பெற்றோா், மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததையடுத்து, மாணவியின் சிறுநீரகம், நுரையீரல், கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெற்றனா்.
தொடா்ந்து, மாணவி மஞ்சுவின் உடல் வியாழக்கிழமை காலை அரியலூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு சாா்பில் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.