நாளை வேலைவாய்ப்பு முகாம்: அரியலூரில் பிரசாரம் தொடக்கம்
பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூரில் வியாழக்கிழமை பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அரியலூா் மாவட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாகுல் ஹமீது, வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.