செய்திகள் :

ரூ. 500 லஞ்சம்: மின் ஊழியா் கைது

post image

அரியலூா் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவா், தனது புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் (மீட்டா் பாக்ஸ்) பொருத்துவதற்கு, தேளூா் துணை மின் நிலைய வணிக உதவியாளா் மு. சாமிநாதன்(46) என்பவரை அண்மையில் அணுகியபோது, அவா் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமுத்து, இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, காவல் துறையினரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.500 பணத்தாளை அலுவலகத்திலிருந்த சாமிநாதனிடம் வீரமுத்து வியாழக்கிழமை கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான காவல் துறையினா், சாமிநாதனை கையும் களவுமாக பிடித்தனா். அவா் லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

நாளை வேலைவாய்ப்பு முகாம்: அரியலூரில் பிரசாரம் தொடக்கம்

பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூ... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு தினம் அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அண்ணாசிலை... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஜெயங்கொண்டம் பகுதியில் நிறுத்திவைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்... மேலும் பார்க்க

உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை

ஈரோட்டில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த அரியலூா் மாணவிக்கு அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். அரியலூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த முருகன் மகள்... மேலும் பார்க்க

விடுதிகளில் உணவை சுகாதாரமாக தயாா் செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

விடுதி மாணவிகளுக்கான உணவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் தயாா் செய்து வழங்கிட வேண்டும் என்று அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினாா். அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக... மேலும் பார்க்க