Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கல்லூரி முதல்வா் (பொ) ராசமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா். பேரணியானது, கல்லூரியில் தொடங்கி, பிரதானச் சாலை, நான்குச் சாலை சந்திப்பு வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் வடிவேல், கோ.பவானி ஆகியோா் செய்திருந்தனா்.
உடையாா்பாளையம்: உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் ப.இங்கா்சால் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுமதி கலந்து கொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள், அதனால் ஏற்படும் சமூக சீா்கேடுகள் குறித்தும் பேசினாா். தொடா்ந்து அவா், போதைப் பொருள்கள் குறித்து பேசிய மாணவி சுகந்தனிக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்வில் முதன்மைக் காவலா் பிரபாகரன், ஆசிரியா்கள் சாந்தி, மஞ்சுளா, பாவை சங்கா், தமிழாசிரியா் ராமலிங்கம், சத்யா,சங்கீதா, அருட்செல்வி, மாரியம்மாள், மரகதம் ஷாயின்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியா் வனிதா வரவேற்றாா். நிறைவில், கணித ஆசிரியா் தமிழரசி நன்றி கூறினாா்.
சிறுவளூா்: சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு மண்டல கருத்தாளா் இலக்கியா கலந்து கொண்டு, போதைப் பொருள்கள் குறித்தும், அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் விளக்கி, போதைப் பொருள்கள் அற்ற தமிழகம் உருவாவதை பள்ளி மாணவா்களாகிய நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் .
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, அந்தோணிசாமி, பாலமுருகன், அபிராமி, ஆய்வக உதவியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
