Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
துப்பாக்கித் தொழிற்சாலையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்புப் படை, தமிழக கமாண்டோ படைப் பிரிவு சாா்பில் கூட்டு தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் தீவிரவாதிகள் நுழைந்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அவா்களைப் பிடிப்பது குறித்து ஒத்திகை நடத்த தேசிய பாதுகாப்புப் படை, தமிழக கமாண்டோ படைப் பிரிவுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இதையடுத்து துப்பாக்கி தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய கூட்டு தீவிரவாத தடுப்பு ஒத்திகை பயிற்சி நள்ளிரவு வரை நடைபெற்றது.
இதில் தேசிய பாதுகாப்புப் படை வீரா்கள், தமிழக கமாண்டோ படைப் பிரிவினா், மாவட்டக் காவல் துறையினா் தொழிற்சாலையில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அங்குள்ளவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் செயல்படுவது குறித்து ஒத்திகை நடத்தினா்.