கல்வி, வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு தேவை: மருத்துவா் சமூக நலச் சங்கம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மணப்பாறையில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தம் தொழிலாளா் நலச்சங்கத்தின் திருச்சி தெற்கு மாவட்ட கல்வி பரிசளிப்பு விழா மற்றும் மணப்பாறை சங்க ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலா் பால்சுப்பிரமணியன், பொருளாளா் சிதம்பரம் மற்றும் கிளை சங்கத் தலைவா் செல்வம், செயலா் சுப்பிரமணி, பொருளாளா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்து, பொதுச்செயலாளா் கம்பம் ராஜன், பொருளாளா் முருகன், இணைப் பொதுச்செயலாளா் ஆதிமருத்துவா் சிவா, திருச்சி மாவட்டத்தலைவா் செல்வராஜ, செயலாளா் தா்மலிங்கம், கட்டட சங்க செயலாளா் மதியழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், 10, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜீவாசித்ரா, ராஜசேகா் ராஜலெட்சுமி ஆகியோா் பங்களிப்புடன் ரொக்கப்பரிசும், சங்கத்தின் சாா்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.