செய்திகள் :

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

post image

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிறது.

அந்த வகையில், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாகவே கண்காணிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் (Nau Sena Bhavan) கடற்படைப் பிரிவில் உயர் பிரிவு எழுத்தரான விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுடன் நீண்ட காலமாகவே தொடர்பில் இருப்பதை அறிந்து, 2 ஆண்டுகளாகவே கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இவரது கைது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் கேமில் பிரியா ஷர்மா (போலியான பெயராகக்கூட இருக்கலாம்) என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் விகாஸ் யாதவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆன்லைன் கேமில் விகாஸ் அடிமையானதைக் கண்ட பிரியா, அவரை பாகிஸ்தானுக்கு உளவுபார்க்க பயன்படுத்திக் கொண்டார்.

அவருடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளிலும் உரையாடியுள்ளார். விகாஸுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பிரியா பணமும் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.

2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட உளவாளி ரவி பிரகாஷ் மீனா தொடர்பான வழக்கில் இருந்துதான், விகாஸ் வழக்கும் தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் நான்காம் நிலை ஊழியராக இருந்த ரவி பிரகாஷ், பாகிஸ்தானுக்கு வரைபடங்கள் போன்ற முக்கிய தகவல்களை வழங்கியதற்கு ஈடாக, அவருக்கு கிரிப்டோகரன்சி சேனல் பணம் அளிக்கப்பட்டது.

அதே கிரிப்டோகரன்சி சேனலில் விகாஸும் இருப்பது அறிந்து, அவரும் 2 ஆண்டுகளாக கண்காணிப்பு வளையத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரை கைது செய்த புலனாய்வு அமைப்புகள், 4 நாள் காவல் அனுமதியையும் பெற்றுள்ளனர். விகாஸின் மொபைல் போன், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்திய கடற்படையின் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, விகாஸ் அனுப்பியிருக்கலாம் என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் முக்கிய தகவல்களை வழங்கியிருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

இந்திய திரைப்படத்துக்குத் தடை: பாகிஸ்தான் பெண் அமைச்சா் வருத்தம்

கடந்த 2017-ஆம் ஆண்டு அமீா் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டதற்காக பஞ்சாப் மாகாண அமைச்சா் மரியம் ஔரங்கசீப் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளாா். தடை விதிக்கப்... மேலும் பார்க்க

இந்தியாவில் 18.9 லட்சம் நிறுவனங்கள்: மத்திய அரசு தகவல்

மே மாத நிலவரப்படி 18.9 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இவை மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. மே... மேலும் பார்க்க

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறாா்’: நியூயாா்க் மேயா் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன. ஜனநாயகக் கட்சி சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ம... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க