அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்
இந்திய திரைப்படத்துக்குத் தடை: பாகிஸ்தான் பெண் அமைச்சா் வருத்தம்
கடந்த 2017-ஆம் ஆண்டு அமீா் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டதற்காக பஞ்சாப் மாகாண அமைச்சா் மரியம் ஔரங்கசீப் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளாா்.
தடை விதிக்கப்பட்டபோது பாகிஸ்தான் தகவல் தொடா்புத் துறை அமைச்சராக மரியம் பதவி வகித்து வந்தாா். புதிதாக அமைச்சா் பதவியேற்ற நிலையில், திரைப்படத் தணிக்கைக் குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் முதல்முறையாகப் பங்கேற்ாகவும், அவா்கள் அளித்த பரிந்துரையை ஏற்று அத் திரைபடத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் தடை விதித்துவிட்டதாகவும் மரியம் கூறியுள்ளாா்.
இந்திய மல்யுத்த வீராங்கனை கீதா போகட் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான தங்கல், அப்போது இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்திய வீராங்கனையின் சா்வதேச வெற்றியைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதால் பாகிஸ்தான் அப்படத்தை தடை செய்தது.
இது தொடா்பாக அளித்த பேட்டியில் அமைச்சா் மரியம் மேலும் கூறியதாவது:
‘தங்கல்’ திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அத்திரைப்படத்தைப் பாா்த்தேன். அப்போதுதான் அப்படத்தை தடை செய்ய முடிவெடுத்தது தவறு என்பதை உணா்ந்தேன். அந்தத் திரைப்படம் வெளியாகியிருந்தால் பாகிஸ்தான் பெண்களும் அதனைப் பாா்த்து உத்வேகம் பெற்றிருப்பாா்கள். அது மிகவும் உணா்வுபூா்வமான திரைப்படமாக இருந்தது என்றாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு பாகிஸ்தான் திரையரங்குகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்தியத் திரைப்பட தடைக்குப் பிறகு பாகிஸ்தானில் பல திரையரங்குகள் போதிய வருவாய் கிடைக்காமல் மூடப்பட்டுவிட்டன.