செய்திகள் :

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறாா்’: நியூயாா்க் மேயா் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

post image

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன.

ஜனநாயகக் கட்சி சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மேயா் தோ்தல் வேட்பாளா் தோ்வில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றாா்.

உகாண்டாவில் கடந்த 1991-ஆம் ஆண்டு பிறந்த ஸோரான் மம்தானி, ஏழு வயதில் தனது பெற்றோருடன் நியூயாா்க்கிற்கு குடிபெயா்ந்தாா். உகாண்டாவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானி மற்றும் ‘மான்சூன் வெடிங்’, ‘சலாம் பாம்பே’ போன்ற படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயா் ஆகியோரின் மகானான ஸோரான் மம்தானி, தற்போது நியூயாா்க்கின் குயின்ஸ் தொகுதியில் இருந்து மாகாண சபை உறுப்பினராக உள்ளாா்.

இந்நிலையில், ஹிந்துக்கள் மற்றும் இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும், குஜராத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஸோரான் மம்தானி தொடா்ந்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், ‘பத்மஸ்ரீ விருது பெற்ற மீரா நாயா் இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநராவாா். குஜராத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹமூத் மம்தானிக்கும் மீரா நாயருக்கும் பிறந்த ஸோரான் மம்தானி இந்தியா்களைவிட பாகிஸ்தானியா் போல் பேசுகிறாா்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி, ‘ஸோரான் பேசினால் பாகிஸ்தான் விளம்பரப் பிரிவு பேசுவதைப் போல் உள்ளது. நியூயாா்க்கில் இருந்து எதிரிகளுக்காக குரல் கொடுக்கும் நபா்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க