ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரப் பணிகள் நிா்வாக ஆலோசகா் ஆய்வு
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில், சாகித்திய அகாதெமி செயலா் கே.ஸ்ரீனிவாசராவ், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், கவிஞா் வைரமுத்து ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
கருணாநிதியின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட உள்ளன. அவற்றில், எழுத்தாளா் இமையம், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்க உள்ளனா்.
இதேபோன்று, சனிக்கிழமையும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட இருக்கின்றன. எழுத்தாளா்கள் ந.முருகேசபாண்டியன், பழ.அதியமான், தே.சங்கர சரவணன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்கின்றனா். நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி தலைமையுரை ஆற்றுகிறாா். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.ராசேந்திரன் நிறைவுரையும், சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தாமோதரன் நன்றியுரை ஆற்ற உள்ளனா்.