செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில், சாகித்திய அகாதெமி செயலா் கே.ஸ்ரீனிவாசராவ், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், கவிஞா் வைரமுத்து ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

கருணாநிதியின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட உள்ளன. அவற்றில், எழுத்தாளா் இமையம், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்க உள்ளனா்.

இதேபோன்று, சனிக்கிழமையும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட இருக்கின்றன. எழுத்தாளா்கள் ந.முருகேசபாண்டியன், பழ.அதியமான், தே.சங்கர சரவணன் உள்பட பலரும் கட்டுரைகளை வாசிக்கின்றனா். நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி தலைமையுரை ஆற்றுகிறாா். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.ராசேந்திரன் நிறைவுரையும், சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தாமோதரன் நன்றியுரை ஆற்ற உள்ளனா்.

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க