செய்திகள் :

ரூ. 857 கோடி சம்பளத்தில் செயல் நுண்ணறிவு வேலை! மெட்டா அழைப்பு!

post image

சிறந்த திறன்வாய்ந்த செயல் நுண்ணறிவுப் பிரிவில் வேலை வழங்க மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தில் செயல் நுண்ணறிவுப் பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உலகளவிலான பெரிய நிறுவனங்களில் மனிதர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, செயல் நுண்ணறிவின் உதவியை நாடி வருகின்றனர்.

அந்த வகையில், மெட்டா நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஆனால், தற்போது செயல் நுண்ணறிவுப் பிரிவில் சிறந்து விளங்குபவர்களை, தனது நிறுவனத்தில் பணிபுரிய மெட்டா அழைப்பு விடுத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Superintelligence) ஆய்வகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோரைச் சேர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையில், தான் நேரடியாக ஈடுபட்டால் மட்டுமே மெட்டாவில் புது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.

பணிபுரிய விரும்புபவர்களுக்கு, மார்க் ஸக்கர்பெர்க்கின் இல்லத்தில் விருந்தளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செயல் நுண்ணறிவு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு (Top AI Talent) 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 857 கோடி) சம்பளமாக வழங்கப்படும் என்றும் தகவல் கூறுகின்றன.

இந்தப் பணிக்காக சாட்ஜிபிடி செயலியின் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ-யின் ஊழியர்களிடமும் மெட்டா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது நிறுவன ஊழியர்கள் யாரும் வெளியேறவில்லை என்று ஓபன்ஏஐ-யின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ தி... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்ந... மேலும் பார்க்க

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகள... மேலும் பார்க்க

சீனாவில் வாகனம் மோதி பள்ளிக் குழந்தைகள் படுகாயம்! மீண்டும் கார் தாக்குதலா?

சீனாவின் பெய்ஜிங் புறநகர் மாவட்டத்திலுள்ள, தொடக்கப் பள்ளியின் அருகில் குழந்தைகள் மீது ஒருவர் காரால் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங் மாகாணத்தின் மியூன் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி அருகில... மேலும் பார்க்க

தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறைந்து விட்டதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் பணக்கார மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்து விட்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது: முதல்முறையாக கமேனி பேச்சு!

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல்முறையாக பொது அறிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க