செய்திகள் :

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

post image

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்று (ஜூன் 25) மாலை மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்துள்ளது. இதனால், அங்குள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், காங்கராவிலுள்ள இந்திர பிரியதர்ஷினி நீர்மின் திட்டப் பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 15 - 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், வெள்ளத்தில் பலியான 2 தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 26) காலை முதல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்ததில்; மேலும் 2 தொழிலாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 8 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், குலு மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 14 வயதுடைய சிறுவன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான பாறைகள் மற்றும் சமநிலை இல்லாத நிலப்பரப்பினால் அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது சிரமமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

SUMMARY

Cloudburst floods in Himachal Pradesh! Death toll rises, 20 people missing!

இதையும் படிக்க:அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம்... மேலும் பார்க்க

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்... மேலும் பார்க்க

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க