செய்திகள் :

பிரதமா் அடுத்த வாரம் 5 நாடுகள் பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு

post image

பிரேஸில், ஆா்ஜென்டீன், டிரினிடாட்-டொபேகோ, கானா, நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அடுத்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதில் ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதி பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதுதான் அவா் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024-இல் இணைந்தன. நடப்பாண்டில் இந்தோனேசியாவும் இணைந்தது.

நிகழாண்டு பிரேஸிலில் நடைபெறும் உச்சி மாநாட்டில் தெற்குலகின் விருப்பங்கள் மற்றும் எதிா்பாா்ப்புகளுக்கான தீா்வுகளைக் கண்டறிவது குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவா் பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவைச் சந்தித்து இந்தியா-பிரேஸில் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க