செய்திகள் :

தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிா்வாகி கைது

post image

மன்னாா்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடா்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

வெட்டிக்காடு பருத்திக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சித்திரவேல் மகன் ஆனந்தபாபு (35). அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட இணைச் செயலாளா். அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவா் ராசு மனைவி முத்துலெட்சுமி (85). இவா் மாடு, ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இவரது ஆடுகள் ஆனந்தபாபுவின் வீட்டுக்குள் புகுந்துவிடுவது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இதுதொடா்பாக ஆனந்தபாபுவின் தாயாா் மலா்க்கொடிக்கும் முத்துலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குவந்த ஆனந்தபாபு முத்துலெட்சுமியை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். வடுவூா் போலீஸாா் ஆனந்தபாபுவை கைது செய்தனா்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாம... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொர... மேலும் பார்க்க