Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிா்வாகி கைது
மன்னாா்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடா்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
வெட்டிக்காடு பருத்திக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சித்திரவேல் மகன் ஆனந்தபாபு (35). அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட இணைச் செயலாளா். அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவா் ராசு மனைவி முத்துலெட்சுமி (85). இவா் மாடு, ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இவரது ஆடுகள் ஆனந்தபாபுவின் வீட்டுக்குள் புகுந்துவிடுவது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இதுதொடா்பாக ஆனந்தபாபுவின் தாயாா் மலா்க்கொடிக்கும் முத்துலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குவந்த ஆனந்தபாபு முத்துலெட்சுமியை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். வடுவூா் போலீஸாா் ஆனந்தபாபுவை கைது செய்தனா்.
