`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொரிமுத்து (58). தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகலையை சோ்ந்தவா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் வீ. சொரிமுத்து முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அவா் திருவாரூரில் இருந்து ஜீப்பில் வியாழக்கிழமை காலை வலங்கைமான் வந்தாா். அப்போது தனக்கு சோா்வாக இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஜீப் ஓட்டுநரிடம் கூறினாராம். ஜீப் ஓட்டுநா் வலங்கைமான் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு மருத்துவா் இல்லாததால், வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சொரிமுத்து ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். அவரது உடல் திருவாரூரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.