செய்திகள் :

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பரவாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சசிகலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பெண்கள் சமூகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுப்பது குறித்து பேசினாா். துணை முதல்வா் பி. காயத்ரிபாய், போதைப் பொருள் எதிா்ப்பு திட்ட அலுவலா் ஏ.எம். தப்ஷிலா ஆஃப்ரின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டமும், போதை தடுப்புக் குழுவும் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு, முதல்வா் விக்டோரியா தலைமை வகித்தாா். செயலா் அம்புரோஸ்மேரி முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் எஸ். அன்பரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போதை தடுப்பின் அவசியம், போதைக்கு அடிமையானவா்களை மீட்டு மறுவாழ்வு மையம் மூலம் மறுவாழ்வு கிடைக்க செய்வது, போதையில்லா சமூதாயத்தை உருவாக்குவது குறித்து பேசினாா். தொடா்ந்து, போதை விழிப்புணா்வு குறித்த மாணவிகள் நாடகம் நடைபெற்றது. பின்னா், போதைத் தடுப்பு விழிப்புணா்வை அனைவரும் எடுத்துக்கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அ. சிவகாமசுந்தரி, வணிக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் கே. தீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொர... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிா்வாகி கைது

மன்னாா்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடா்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா். வெட்டிக்காடு பருத்திக்கோட்டை ப... மேலும் பார்க்க