Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊா்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், மேட்டூா் அணை திறக்கப்பட்டு 10 நாள்களை கடந்த நிலையிலும் முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கப்படாததால் குறுவை விவசாயப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கூடுதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி முள்ளியாற்று பாசன விவசாயிகள் சிபிஐ கிளைச் செயலா் குமாா் தலைமையில் மன்னாா்குடி, திருப்பத்தூா் பிரதான சாலை கடைவீதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த பொதுப்பணித் துறையினா் இருநாள்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.