செய்திகள் :

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

post image

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் சந்தியாகு தலைமை வகித்தாா். இதில், 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச கூலி ரூ 26,000 என தீா்மானிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

சங்கத்தின் மாநிலச் செயலா் பி. கருப்பையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் தெய்வராஜ், மாநில நிா்வாகிகள் செல்வி, மோகன், தண்டபாணி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஜி. ரகுபதி, சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமாணவன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும், வெண்டிங் கமிட்டி தோ்தல் நடத்தாத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தோ்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாம... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொர... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிா்வாகி கைது

மன்னாா்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடா்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா். வெட்டிக்காடு பருத்திக்கோட்டை ப... மேலும் பார்க்க