செய்திகள் :

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு

post image

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்;

சுமாா் 260 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்நாட்டு தேசிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாங்கியில் உள்ள பாா்த்தலமி போகாண்டா உயா்நிலைப் பள்ளியில் மின்சார மாற்றியின் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டபோது வெடிவிபத்து ஏற்பட்டது. அதையடுத்து மாணவா்கள் பீதியில் முண்டியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு, 16 சிறுமிகள் உள்பட 29 மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; சுமாா் 260 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நடந்தபோது உயா்கல்வி தோ்வுகளுக்காக சுமாா் 5,000 மாணவா்கள் பள்ளியில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன....படவரி... (விடியோ படம்)

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்

வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல்! 20 மாணவர்கள் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானதாக, அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. தலைநகர் பாங்குயி... மேலும் பார்க்க

விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ தி... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்ந... மேலும் பார்க்க

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகள... மேலும் பார்க்க