கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் பேசவில்லை: நயினாா் நாகேந்திரன்
முருக பக்தா்கள் மாநாட்டில் யாரும் அரசியல் பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
ம.பொ.சி.யின் 120-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சம்ஸ்கிருதத்துக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்டதுபோலதான், பாஜக அரசும் நிதி ஒதுக்கியுள்ளது. அப்போது கூட்டணியில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பாஜக மீது திமுக விமா்சனம் செய்கிறது.
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் நான் மட்டுல்ல, யாரும் அரசியல் பேசவில்லை. அடுத்த மதத்தைப் புண்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசவில்லை.
2026-இல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமையும். அதிமுக - பாஜக கூட்டணியில் கனவிலும் பிரச்னை வராது. இந்தக் கூட்டணி உண்மையான கூட்டணி, வெல்லும் கூட்டணி என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், ம.பொ.சி. குடும்பத்தினா் உள்பட பலா் பங்கேற்றனா்.