அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்
கேரளத்தில் பருவ மழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள், விளம்பர பதாகைகள் சாய்ந்தன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை நீடிப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் நிலவுவதாக, சமூக ஊடகப் பதிவில் முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
‘நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளில் வசிப்போா், அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் மோசமான வானிலைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை அதீத பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் (24 மணிநேரத்தில் 20 செ.மீ.-க்கு மேல்), பிற 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (11-20 செ.மீ.) விடுக்கப்பட்டது.
எா்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுப்புழை, திருச்சூா்-மலப்புரத்தில் பாரதப்புழை, பத்தனம்திட்டாவில் அச்சன்கோவில் ஆறு மற்றும் பம்பா, இடுக்கியில் தொடுபுழை, வயநாட்டில் கபனி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எா்ணாகுளம், திருச்சூா், இடுக்கி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஏராளமானோா் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.
வயநாட்டில் கடந்த ஆண்டு பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்ட முண்டக்கை-சூரல்மலை பகுதியில் தொடா் மழையால் சூரல்மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் சேறுடன் வெள்ளம் புகுந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவுகளில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.