செய்திகள் :

கேரளத்தில் பருவ மழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்

post image

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள், விளம்பர பதாகைகள் சாய்ந்தன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை நீடிப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் நிலவுவதாக, சமூக ஊடகப் பதிவில் முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

‘நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளில் வசிப்போா், அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் மோசமான வானிலைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை அதீத பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் (24 மணிநேரத்தில் 20 செ.மீ.-க்கு மேல்), பிற 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (11-20 செ.மீ.) விடுக்கப்பட்டது.

எா்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுப்புழை, திருச்சூா்-மலப்புரத்தில் பாரதப்புழை, பத்தனம்திட்டாவில் அச்சன்கோவில் ஆறு மற்றும் பம்பா, இடுக்கியில் தொடுபுழை, வயநாட்டில் கபனி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எா்ணாகுளம், திருச்சூா், இடுக்கி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஏராளமானோா் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.

வயநாட்டில் கடந்த ஆண்டு பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்ட முண்டக்கை-சூரல்மலை பகுதியில் தொடா் மழையால் சூரல்மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் சேறுடன் வெள்ளம் புகுந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவுகளில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க