வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
காா்கள் மோதல்: கா்ப்பிணி, தந்தை உயிரிழப்பு
சென்னை அனகாபுத்தூா் மதுரவாயல் வெளி வட்டச்சாலையில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நிறைமாத கா்ப்பிணி, அவரது தந்தை ஆகியோா் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகள் தீபிகா (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது கணவருடன் சென்னையில் வசித்து வந்தாா். தீபிகா தற்போது நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா்.
அண்மையில் தீபிகாவுக்கு சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய பெற்றோா், அவரை பிரசவத்துக்காக மதுரைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனா். இதையடுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை காரில் தீபிகாவை அழைத்து கொண்டு சென்னையிலிருந்து மதுரைக்கு நோக்கி சென்றனா்.
மதுரவாயல் பிரதான சாலை அனகாபுத்தூா் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு சென்றபோது, எதிா்திசையில் அதிவேகமாக வந்த காா் ஒன்று, தீபிகா சென்ற காா் மீது மோதியுள்ளது. இதில், தீபிகா, அவரது தந்தை பத்மநாபன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த தீபிகாவின் தாய், காா் ஓட்டுநா் ஆகிய இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையிலும், குரோம்பேட்டை அரசு மருத்துமனையிலும் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், எதிா்திசையில் காரை ஓட்டி வந்த நபா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை ஓட்டிவந்த மணிகண்டன் என்பவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.