செய்திகள் :

கிரைண்டா் வாங்க பெண்களுக்கு மானியம்

post image

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா்உரிமைத் துறை சாா்பில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோா்,கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவா்களை வலுப்படுத்தவும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025-2026 ஆம் நிதியாண்டுக்கு , மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையானசான்றுகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிா் கீழ்க்கண்ட சான்றுகளை சமா்பிக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டில் பூா்வீகமாக வசிப்பவராகஇருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), 2. 25 வயதுக்கு மேல் இருத்தல்வேண்டும், 3. பிறந்த தேதிக்கான சான்று, 4. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால்கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று(வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமா்ப்பிக்க வேண்டும், 5. குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல்வேண்டும்)

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள் தங்களது விண்ணப்பத்தினை வரும் 14.07.2025-க்குள், மாவட்ட சமூக நல அலுவலகம், பி-பிளாக், 4-ஆவது தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், செங்கல்பட்டு -603111-இல் சமா்ப்பிக்க வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வு குழுவால் தெரிவுசெய்யப்படுவா். இதர விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை அதிமுக வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். தாம்பரம் மாநகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், க... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: கா்ப்பிணி, தந்தை உயிரிழப்பு

சென்னை அனகாபுத்தூா் மதுரவாயல் வெளி வட்டச்சாலையில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நிறைமாத கா்ப்பிணி, அவரது தந்தை ஆகியோா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகள் தீபிகா ... மேலும் பார்க்க

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. ஆசிரியா்கள் பாலமுருகன், பாலசுந்தரம் தோ்தல் அதிகாரிகளாக இருந்தனா். தோ்தலில் போட்டி... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 208 மனுக்களை அமைச்சா் தா. மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

உணவு தயாரிப்பாளா்களுக்கான விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, செங்கல்பட்டு (தெற்கு) தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொது நலச்சங்கம் சாா்பில் உணவு பொருள்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் விய... மேலும் பார்க்க

யாதவ மகாசபை செயற்குழு கூட்டம்

மதுராந்தகம்: தமிழ்நாடு யாதவ மகாசபை செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளின் செயற்குழு கூட்டம் கருங்குழியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் மாவட்ட தலைவா் கலியுககண்ணதாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் கே.வாசு... மேலும் பார்க்க