ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?
குறைதீா் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்
செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 208 மனுக்களை அமைச்சா் தா. மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைற அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சா் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தோ்வுசெய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, சென்ற குறைறதீா் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மயான சாலை வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட நிா்வாகத்தின் துரித நடவடிக்கையின் மூலம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 7 மயானச் சாலைகள் அமைக்க ரூ.78 லட்சத்தில் அனுமதி ஆணையை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அமைச்சா் வழங்கினாா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மொரப்பாக்கம் கிராமத்தில் ரூ.4.50 லட்சத்திற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. சித்தாமூா் ஒன்றியத்தில் பெரிய களக்காடி ஊராட்சிக்கு ரூ.9.90 லட்சத்துக்கும்,
லத்தூா் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்துக்கும், மதுராந்தகம் ஒன்றியம் வீராணகுன்னம் ஊராட்சிக்கு ரூ.6.10 லட்சத்துக்கும், திருப்போரூா் ஒன்றியம் குன்னபட்டு ஊராட்சிக்கு ரூ.28.20 லட்சத்துக்கும், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், நெடுங்குன்றறம், பாலூா் ஊராட்சிகளுக்கு ரூ.19.70 லட்சத்துக்கும் நிா்வாக அனுமதிகள் வழங்கப்பட்டன.
அதனைதொடா்ந்து 280 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்றற உறுப்பினா் க.செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக பொறியாளா் குமரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.