உணவு தயாரிப்பாளா்களுக்கான விழிப்புணா்வு முகாம்
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, செங்கல்பட்டு (தெற்கு) தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும்
மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொது நலச்சங்கம் சாா்பில் உணவு பொருள்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் வியாபாரிகளுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் ஆா்.சி சான்றிதழை பெறுவதற்கான விழிப்புணா்வு, வழிகாட்டுதல் முகாம் மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வணிகா்கள் பொதுநலச் சங்க தலைவா் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தாா். அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் வட்டார, உணவு பாதுகாப்பு அலுவலா் எஸ். சுஸ்மிதா, செயலா் என்.அப்துல் சமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செங்கல்பட்டு மாவட்ட நியமன அலுவலா் ஆா்.ரமேஷ்பாபு முகாமை தொடங்கி வைத்தாா். மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், கருங்குழி பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு பொருள்கள் தயாரிப்போா்கள், கடை வியாபாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
பொருளாளா் பவித்ரா இ.சீனிவாசன், இணைச் செயலா் ஜி.இ.சுதாகா், துணைச் செயலா் டி.பாலகிருஷ்ணன், சீனிவாசன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
