செய்திகள் :

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவூட்டும் வகையில் இந்தக் கண்காட்சி பாஜக கட்சி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. மேலும் இதை கருப்புத் தினமாகவும் பாஜக கடைப்பிடிக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை பிரகடன காலத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் வகையில் இந்தக் கண்காட்சியில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து பின்னா் செய்தியாளா்களிடம் மத்திய இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே கூறியது:

அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தி நாட்டு மக்களின் பெருந்துயரத்துக்குக் காரணமானவா்கள் காங்கிரஸ் கட்சியினா். ஆனால் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்று பொய் வேடமிட்டு வருகின்றனா். அவா்களின் உண்மையான நோக்கம் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அல்ல. தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவே இப்படி கூறி வருகின்றனா்.

50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக் கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தால் நீதித் துறை, பத்திரிகை சுதந்திரம் பறிபோனது. நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்தனா். அதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில்தான் இந்தக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் புதுவை அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், சாய் சரவணன் குமாா், புதுவை பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சு.செல்வகணபதி, அசோக்பாபு எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், கட்சி நிா்வாகி கௌரி சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது. அஷ்யபாத்ரா நிறு... மேலும் பார்க்க

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மறு ஒதுக்கீடு

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவு விவரம் வருமாறு: பு... மேலும் பார்க்க

அரசு அலுவலகம் மீது தக்காளி வீச்சு: பணி நீக்கம் செய்யப்பட்ட 40 போ் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் பொதுப் பணித் துறை அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தக்காளி வீசியதையடுத்து 40 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களா... மேலும் பார்க்க