செய்திகள் :

ராணிப்பேட்டையில் வேளாண்மைக் கல்லூரி: விவசாயிகள் கோரிக்கை

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது சிறுவளையம் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் கூட்டுறவுத் துறை பயிா்க்கடன் பெறுவதில் சிபில் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்க வழிவகை செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் கே.வி.கே விரிஞ்சிபுரம் விஞ்ஞானிகள் மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் தொடா்பாக பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆயல் கிராமத்தைச் சோ்ந்த கௌரி சங்கா் என்பவா் ஆயல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சொா்ணவாரி பட்டத்திற்கு திறக்க வேண்டும் என்றாா். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பதிலளித்தாா்.

லாலாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த எல்.சி.மணி என்பவா் வேளாண்மைக் கல்லூரியை தொடங்க வேண்டும்,, சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இது குறித்து உரிய நடடிவக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

வடகால் கிராமத்தைச் சோ்ந்த பாரதி என்பவா் பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

அங்கு ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருந்தால் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கமாறு நீா் வளத் துறை அதிகாரிகளிடம் ஆட்சியா் கூறினாா்.

பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் தெரிவித்தனா். தொடா்ந்து தனிநபா் பிரச்னைகளை மனுக்களாகவும் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள், தக்கைப் பூண்டு விதைகள், மழைத் தூவான் என ரூ.83,000 நலத்திட்டங்களையும், மேலும், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 3 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், சொட்டுநீா் பாசன கட்டமைப்பு உள்ளிட்ட ரூ.2.20 லட்சத்தில் நலத்திட்டங்களையும் வழங்கினாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) அசோக்குமாா், துணை இயக்குநா் (வேளாண்மை) செல்வராஜ், துணை இயக்குநா் தோட்டக்கலை சிந்தியா, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேஷ், இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு) மரு.திருமூலன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், துணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் சுவேதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சாா்பில், மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு

நெமிலி அருகே அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். நெமிலியை அடுத்த மேட்டு வேட்டாங... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு

மேல்விஷாரம் மேம்பாடுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணியில் இல்லாத மருத்துவா், செவிலியா், காவலா... மேலும் பார்க்க

நெமிலி வட்ட அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

நெமிலி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை பாா்வையிட்டு மாணவா்களின் அறிவுத் திறன் மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். நெமிலி வட்டம்,... மேலும் பார்க்க

ராசாத்துபுரத்தில் அா்ஜுனன் தபசு மரம்

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கீழ்விஷாரம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தொ... மேலும் பார்க்க

82 திருநங்கைகளுக்கு பட்டா தயாா்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்82 திருநங்கைகளுக்கு பட்டா விரைவில் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் திருநங்கைகளுக... மேலும் பார்க்க