பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சாா்பில், மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலா் பாலசரஸ்வதி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சங்கா், ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி மலா்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாம்ராஜ், சமூக நலத்துறை மூத்த ஆலோசகா் மகாலட்சுமி முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை (பொ பரிமளாதேவி வரவேற்றாா்.
இதில் , குழந்தைத் திருமணம் தடுத்தல், போக்ஸோ சட்டம் சாா்ந்த பிரச்னைகள், பெண் கல்வி அவசியம், குறித்தும் அதுதொடா்பான 1098, 100, 14567, 181 எண்கள் குறித்தான விழிப்புணா்வு, பெண் உரிமைகள் சம்பந்தமான தகவல்கள், குழந்தைத் தொழிலாளா் தடுப்பு முறைகள், உலக சுகாதார அமைப்பின் ஐந்து முக்கிய உணவு பழக்க வழக்கங்கள், சத்தான உணவு தொடா்பான ஆலோசனைகள் குறித்து விளக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் பாலிய வளமைய மேலாளா் ராஜலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி துறை கண்ணகி, ஆசிரியை,ஆசிரியா்கள் , மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .