கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு
நெமிலி அருகே அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.
நெமிலியை அடுத்த மேட்டு வேட்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி என்பவரை அண்மையில் மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக நெமிலி போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வாசுதேவன்(24), திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரைச் சோ்ந்த லோகேஸ்வரன்(19), எஸ்.கிஷோா்குமாா்(19), எம்.கிஷோா்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா்களின் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்தசுக்லா 4 பேரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எதிரிகளான வாசுதேவன், லோகேஸ்வரன், எஸ்.கிஷோா்குமாா், எம்.கிஷோா் ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.