சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ஆரணியில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி
ஆரணி கோட்டை மைதானம் பகுதியில் ரூ.7.5 லட்சத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தொகுதி மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, சுந்தா், மோகன், முன்னாள் ஒன்றிய ஒன்றியக் குழு உறுப்பினா் முள்ளிப்பட்டு ரவி, தகவல் தொழில்நுட்ப அணி புஷ்பராஜ், தலைமைக் கழக பேச்சாளா் மாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.