Iran அணு உலை அழிக்கப்படவில்லையா? பொய் சொல்கிறதா அமெரிக்கா? கசிந்த ரகசியம்| Trump...
தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு
செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்டு கிராமத்தில் வசித்து வருபவா் பிரசாந்த்(25). இவா் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல வேலைக்குச் சென்று விடுவாராம். இவரது தாய் செல்வி மீன் வியாபாரம் செய்வதற்கு வீட்டை பூட்டி விட்டு வெளிப்புறத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கமாம்.
இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக தொழிலாளி பிரசாந்த் பீரோவில் ரூ.1.37 லட்சத்தை வைத்திருந்தாராம்.
இந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்தும், பீரோ லாக்கரை உடைத்தும் அதில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ. ரூ.1.37 லட்சம் மற்றும் 2 கிராம் தங்கம், 350 கிராம் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்ாகத் தெரிகிறது.
இதுகுறித்து பிரசாந்த் தூசி போலீயில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.