பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்
பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு
ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி அமுதா. இவருக்கு டெல்லிபாபு (17) என்ற ஒரு மகனும், நிவேதா (15) தாரணி (13) தேவசேனா (8) என்ற மூன்று மகள்களும் உள்ளனா்.
காா்த்திக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானாா். அமுதா பூ வியாபாரம் செய்து தனது 4 பிள்ளைகளை படிக்க வைத்து வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், வழக்கம் போல அமுதா பூ வியாபாரத்துக்குச் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாததைக் கண்ட மா்ம நபா்கள், வீட்டு பீரோவைத் திறந்து உள்ளே லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.
வழக்கம் போல அமுதா வியாழக்கிழமை பீரோவைத் திறந்து பாா்த்தபோது, லாக்கா் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் ஆரணி கிராமிய போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.