பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்
முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது
செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தணிகைவேல்(35). இவா் பட்டுத்தறி நெசவுத் தொழிலாளி ஆவாா்.
இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணமான ஒரே மாதத்தில், மனைவி விஜயலட்சுமி குடும்பத் தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
அதன் காரணமாக, தணிகைவேலுக்கும், இறந்த விஜயலட்சுமி சகோதரா் ராஜா (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஆராத்திரிவேளூா் - அசனமாப்பேட்டை செல்லும் சாலையில் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயில் அருகே தணிகைவேலிடம் ராஜா தகராறு செய்து கொண்டிருப்பதாக, அவரது தந்தை மணிக்கு கைப்பேசியில் சிலா் தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு மணி சென்று பாா்த்தபோது, மகன் தணிகைவேல் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இது குறித்து மணி மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்தாா்.
மேலும், தணிகைவேலின் உடலை கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
மேலும் சம்பவம் தொடா்பாக ராஜாவை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.