செய்திகள் :

கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட உத்தரவு

post image

அரசு ஒப்பந்ததாரா்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்புராம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு சாலைகள் அமைத்துத் தருவது, கட்டடங்கள் கட்டித் தருவதற்கு நான் ஒப்பந்ததாரராக உள்ளேன். தற்போது, தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கு கட்டுமானத் துறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் பாதிப்புக்குள்ளாகிறது. இதுமட்டுமன்றி, தொழிலாளா்களும் பாதிக்கப்படுகின்றனா். கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைத்து நிலையான விலையில் வைத்திருக்க தமிழக அரசு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், விலையைக் குறைக்க அரசு தவறிவிட்டது.

கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரா்களுக்கான 2025- 2026 -ஆம் ஆண்டுக்கான கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை விலைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. உரிய காலத்தில் வெளியிட்டால்தான் ஒப்பந்ததாரா்கள் விலைப் பட்டியல் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி நிா்ணயம் செய்ய முடியும்.

மேலும், கடந்த 2024-25 -ஆம் ஆண்டுக்கான விலை நிா்ணயத் தொகையின் அடிப்படையிலேயே தற்போது ஏல ஒப்பந்தம் நிா்ணயம் செய்யப்படுகிறது. இதனால், அரசு ஒப்பந்ததாரா்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சிமென்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது. இதேபோன்று, கட்டடத் தொழிலாளா்களின் ஊதிய விகிதமும் 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசு நிகழாண்டுக்கான விலை நிா்ணயப் பட்டியலை வெளியிடவில்லை.

இதுகுறித்து நிதி, பொதுப் பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் செயலா்களுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நிகழாண்டுக்கான விலை நிா்ணயப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:

ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டிய விலை நிா்ணயப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?. விலை நிா்ணயப் பட்டியலை வெளியிடவில்லையெனில், ஒப்பந்ததாரா்கள் எவ்வாறு விலை நிா்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கேட்க முடியும். கட்டுமானப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

எனவே, கட்டுமானப் பொருள்களின் விலை நிா்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் அரசு வெளியிட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாரா... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க