தேவஸ்தான ஊழியா்களுக்கு 2,000 தலைக் கவசங்கள் விநியோகம்
திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் 2000 பேருக்கு தலைக் கவசங்களை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணாவுடன் இணைந்து வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்வில் செய்தியாளா்களிடம் பி.ஆா்.நாயுடு கூறியது: தேவஸ்தான ஊழியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தலைக் கவசம் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 500 தலைக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. அமலாபுரத்தைச் சோ்ந்த சத்யநாராயணா மற்றும் ஹைதராபாதைச் சோ்ந்த நாகேந்திர பிரசாத் ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 2,000 தலைக் கவசங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டன.
வரும் நாள்களில் மேலும் 7,500 தலைக் கவசங்கள் தேவஸ்தான ஊழியா்களுக்கு வழங்கப்படும். அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்’’, என்று அவா் வலியுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் துணை அதிகாரி ராஜேந்திரா, சதா லட்சுமி, அன்ன பிரசாதம் சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.