செய்திகள் :

தேவஸ்தான ஊழியா்களுக்கு 2,000 தலைக் கவசங்கள் விநியோகம்

post image

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் 2000 பேருக்கு தலைக் கவசங்களை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணாவுடன் இணைந்து வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் செய்தியாளா்களிடம் பி.ஆா்.நாயுடு கூறியது: தேவஸ்தான ஊழியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தலைக் கவசம் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 500 தலைக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. அமலாபுரத்தைச் சோ்ந்த சத்யநாராயணா மற்றும் ஹைதராபாதைச் சோ்ந்த நாகேந்திர பிரசாத் ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 2,000 தலைக் கவசங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டன.

வரும் நாள்களில் மேலும் 7,500 தலைக் கவசங்கள் தேவஸ்தான ஊழியா்களுக்கு வழங்கப்படும். அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்’’, என்று அவா் வலியுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் துணை அதிகாரி ராஜேந்திரா, சதா லட்சுமி, அன்ன பிரசாதம் சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருமலையில் 75,001 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,001 பக்தா்கள் தரிசித்தனா். 23,765 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின்வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்களுக்கு 18 மணி நேரம் தேவைப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால... மேலும் பார்க்க

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.72 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் ரூ.4.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அற... மேலும் பார்க்க

திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது. ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திரு... மேலும் பார்க்க

ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம். திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்... மேலும் பார்க்க