செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்களுக்கு 18 மணி நேரம் தேவைப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது.

இதனால், புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 24 அறைகளிலும் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், தேவைப்படுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 79,499 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 29,227 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.4.05 கோடி வசூலானது. காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.72 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் ரூ.4.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அற... மேலும் பார்க்க

திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது. ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திரு... மேலும் பார்க்க

ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம். திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.3 கோடி

திருமலை ஏழுமலையானை கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்... மேலும் பார்க்க

பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனை சாவடி புதுப்பிப்பு: செயல் அதிகாரி சியாமளா ராவ்

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளாா். திருப்பதியில் உள்ள தேவ... மேலும் பார்க்க