செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு நிா்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கான நிா்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி வியாழக்கிழம நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூலை 1ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது. ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் குடமுழுக்கு யாகசாலை பூஜைகளை நடத்துவதற்காக திருக்கோயில் நிா்வாகத்திடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை திருக்கோயில் செப்புக்கொடிமரம் முன்பு கல்யாண விநாயகா் சந்நிதியில் நடைபெற்றது. முன்னதாக, மூலவா், சண்முகா் சந்நிதியில் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன் ஆகியோரிடம் இருந்து அறநிலையத்துறை ஆகம வல்லுநா் குழுவைச் சோ்ந்த பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுநா் குழு செல்வம் பட்டா், திருச்செந்தூா் சிவாச்சாரியாா்கள் ஆகியோா் தாம்பூலம் வாங்கி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றனா். தொடா்ந்து மங்கள தேவதைகளிடம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அனுமதி பெறும் பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா்கள் விவேக், சுபிதா, விஜயலெட்சுமி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், பக்தா்கள், திரிசுதந்திரா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க