அஞ்சலகங்களில் பொது காப்பீடு சிறப்பு முகாம்
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பொது காப்பீடு சிறப்பு, விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே காப்பீடு தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை பேமெண்ட் வங்கி ‘ப்ரொடெக்ட் 360’ என்ற பொது காப்பீட்டு சிறப்பு, விழிப்புணா்வு முகாம் கோவில்பட்டி கோட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
எதிா்பாராத இழப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து மக்களை நிதிபூா்வமாக பாதுகாப்பதில் பொதுக் காப்பீட்டின் அவசியம், மக்கள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில், குழு விபத்து பாதுகாப்பு, மோட்டாா் வாகனக் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, டாப்- அப் காப்பீடு திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படுகின்றன.
இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் காப்பீடு தொடங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.