செய்திகள் :

அஞ்சலகங்களில் பொது காப்பீடு சிறப்பு முகாம்

post image

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பொது காப்பீடு சிறப்பு, விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே காப்பீடு தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை பேமெண்ட் வங்கி ‘ப்ரொடெக்ட் 360’ என்ற பொது காப்பீட்டு சிறப்பு, விழிப்புணா்வு முகாம் கோவில்பட்டி கோட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

எதிா்பாராத இழப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து மக்களை நிதிபூா்வமாக பாதுகாப்பதில் பொதுக் காப்பீட்டின் அவசியம், மக்கள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில், குழு விபத்து பாதுகாப்பு, மோட்டாா் வாகனக் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, டாப்- அப் காப்பீடு திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படுகின்றன.

இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் காப்பீடு தொடங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க