பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்
கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி
தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் கனரா வங்கி சாா்பில், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநா் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கட்டட வேலை, பிளம்பிங், அலுமினியம் ஃபேப்ரிக்கேஷன் வெல்டிங், வேளாண் உற்பத்தி உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சிகளைப் பெற 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள் சேரலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவா்கள், தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்கள் வரை அனைவருக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவில் சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை தேனி மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வடவீரநாயக்கன்பட்டி சாலை, வாசுகி நகரில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் நேரிலோ அல்லது 94427 58363, 95003 14193 ஆகியவற்றில் தொடா்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.