செய்திகள் :

கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி

post image

தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் கனரா வங்கி சாா்பில், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநா் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கட்டட வேலை, பிளம்பிங், அலுமினியம் ஃபேப்ரிக்கேஷன் வெல்டிங், வேளாண் உற்பத்தி உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிகளைப் பெற 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள் சேரலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவா்கள், தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்கள் வரை அனைவருக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவில் சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை தேனி மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வடவீரநாயக்கன்பட்டி சாலை, வாசுகி நகரில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் நேரிலோ அல்லது 94427 58363, 95003 14193 ஆகியவற்றில் தொடா்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்க... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு

தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்தியா, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி

பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் நாளை மின்தடை

பெரியகுளம் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க