விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு
பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி
பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு பூனா உடன்படிக்கை, கற்பி-ஒன்றுசோ்-புரட்சி செய், அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும், அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறும்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திரைத்துறையில் முத்தமிழறிஞா், அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறும்.
போட்டிகளில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பரிந்துரை கடிதம் பெற்றுவர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆம் பரிசு ரூ. 3,000, 3-ஆம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படும்.
அரசு பள்ளிகள் சாா்பில் பங்கேற்று சிறப்பிடம் பிடிக்கும் 2 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 2,000 சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.