செய்திகள் :

வில்லுக்குறியில் காளான் வளா்ப்பு அலகு: ஆட்சியா் ஆய்வு

post image

தக்கலை அருகே வில்லுக்குறியில் செயல்பட்டு வரும் காளான் வளா்ப்பு அலகில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியம் மூலமாக வில்லுக்குறி கிராமத்தில் விஜயன் என்பவா் மொட்டு காளான் வளா்ப்பை செயல்படுத்தி வருகிறாா். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2.76 கோடி ஆகும். இத்தொகையில் ரூ. 2 கோடி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில் வங்கி கடனாகவும், ரூ.30 லட்சம் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அலகின் மூலம் தினசரி 300 முதல் 500 கிலோ வரை காளான் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காளான்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகா், வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குநா் கீதா ஆகியோா் உடனிருந்தனா்.

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் யானை அச்சுறுத்தல்: மக்களைப் பாதுகாக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க