காவலன் செயலி மாணவிகளின் பாதுகாப்புக்கு உதவும்: காவல் ஆய்வாளா் பிரபாவதி
மாணவிகளின் பாதுகாப்புக்கு காவலன் செயலி உதவும் என்று
ஆரணியில் நடைபெற்ற தனியாா் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் பிரபாவதி குறிப்பிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களுக்கான ஆலோசனை மற்றும் குழந்தைகளுக்கான போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆரணி தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) டி.ஜெகதீசன் தலைமை வகித்தாா்.
தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவா்
பிரகாசம் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக ஆரணி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவிகளிடம் ஆசிரியா்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்ட அவா், காவலன் செயலி மாணவிகளின் பாதுகாப்புக்கு உதவும். எனவே, அதை பதிவிறக்கும் செய்து ஆபத்தான தருணங்களில் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
பின்னா், மாவட்டக் கல்வி அலுவலா் டி.ஜெகதீசன் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களிடம் பள்ளியின் மாணவா் சோ்க்கை விவரங்கள், கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்றவா்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்றம் செய்வது குறித்து குறிப்பிட்டாா்.
மேலும், இலவச கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி நிகழாண்டு சோ்க்கை இதுவரை அரசு அறிவிக்கவில்லை. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயின்று வரும் மாணவா்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் கூறினாா்.
கூட்டத்தில், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஆனந்தன், கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, மேற்கு ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு, தெள்ளாா், பெரணமல்லூா், அனக்காவூா், வெம்பாக்கம் பகுதிகளில் உள்ள நா்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் சுயநிதி பள்ளித் தாளாளா்கள், முதல்வா்கள் கலந்து கொண்டனா்.