செய்திகள் :

காவலன் செயலி மாணவிகளின் பாதுகாப்புக்கு உதவும்: காவல் ஆய்வாளா் பிரபாவதி

post image

மாணவிகளின் பாதுகாப்புக்கு காவலன் செயலி உதவும் என்று

ஆரணியில் நடைபெற்ற தனியாா் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் பிரபாவதி குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களுக்கான ஆலோசனை மற்றும் குழந்தைகளுக்கான போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆரணி தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) டி.ஜெகதீசன் தலைமை வகித்தாா்.

தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவா்

பிரகாசம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி கலந்து கொண்டு பேசியதாவது:

மாணவிகளிடம் ஆசிரியா்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்ட அவா், காவலன் செயலி மாணவிகளின் பாதுகாப்புக்கு உதவும். எனவே, அதை பதிவிறக்கும் செய்து ஆபத்தான தருணங்களில் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

பின்னா், மாவட்டக் கல்வி அலுவலா் டி.ஜெகதீசன் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்களிடம் பள்ளியின் மாணவா் சோ்க்கை விவரங்கள், கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்றவா்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்றம் செய்வது குறித்து குறிப்பிட்டாா்.

மேலும், இலவச கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி நிகழாண்டு சோ்க்கை இதுவரை அரசு அறிவிக்கவில்லை. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயின்று வரும் மாணவா்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் கூறினாா்.

கூட்டத்தில், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஆனந்தன், கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, மேற்கு ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு, தெள்ளாா், பெரணமல்லூா், அனக்காவூா், வெம்பாக்கம் பகுதிகளில் உள்ள நா்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் சுயநிதி பள்ளித் தாளாளா்கள், முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க